கைதாவாரா கர்நாடக அமைச்சர்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜானை கைது செய்யக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர்நடத்திய போராட்டத்தின் விளைவாக ஜான் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கடவுள்கொடுத்த தண்டனை என கர்நாடக அமைச்சர் ஜான் கூறியிருந்தார். இந்த கருத்துக்குபலத்த எதிர்ப்பு எழுந்ததால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜான் பதவியை ராஜினாமா செய்துவிட்டாலும் அவரை கைது செய்ய வேண்டும்.அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனகோரி பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூர் மகாத்மா காந்தி ரோட்டில் மாநில தலைவர் பசவராஜ் தலைமையில் தர்ணாபோராட்டம் நடந்தது. இதுகுறித்து முன்னாள் மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாகூறியதாவது:

ஜானுக்கு எதிரான தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைபெறும். தலைவருக்கு கொலைமிரட்டல் இருப்பதால் ஜான் கைது செய்யப்பட வேண்டும்.

ஜான் பதவி விலகல் குறித்து முன்னாள் போலீஸ் துறை அதிகாரி கொலாசோ கூறியுள்ளகருத்து கண்டிக்கத்தக்கது என கூறினார்.

மந்திரி ஜானை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு கப்பன்பார்க் காவல்நிலையத்தில் முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது ஆனாலும் போலீசார் அவர் மீதுவழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

ஜான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி பா.ஜ.க.எம்.எல்.ஏ.க்கள்கூட்டாக கப்பன் பார்க் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா செய்தனர்.

பா.ஜ.க. தலைவர்கள் கர்நாடக டி.ஜி.பி. தினகரைச் சந்தித்து புகார் கொடுத்தனர். அதன்பின் ஜான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். ஜான் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+