ஜோதிடர் ஏற்படுத்திய பீதி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் பிப்ரவரி மாதம் மீண்டும் பூகம்பம் ஏற்படும் என்று ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது, குஜராத் மக்களிடையே பெரும்பீதியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநில மக்கள் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த நேரத்தில் காந்திநகரைச் சேர்ந்தஅம்பாலால் பாடீல் என்ற ஜோதிடர், குஜராத் மக்களிடையே மீண்டும் பூகம்ப பீதியை ஏற்படுத்தி விட்டார்.

அகமதாபாத் நகரில் வாழும் 40 லட்சம் மக்கள் அம்பாலால் கூறிய ஜோதிடத்தால் மிகவும் பீதியடைந்துள்ளனர். அவர் தனது ஜோதிடத்தில் கிரங்களைஅடிப்படையாக வைத்துக் கணக்கிட்டதில் பிப்ரவரி 3 ம் தேதி முதல் பிப்ரவரி 15 ம் தேதிக்குள் குஜராத்தை மீண்டும் பூகம்பம் தாக்கும் அபாயம் உள்ளதுஎன்று கூறியுள்ளார்.

அகமதாபாத் நகரில் வசிக்கும் மக்கள் அம்பாலால் கூறியதை மிகவும் நம்புகின்றனர். ஏனெனில் ஏற்கனவே ஜனவரி 18 ம் தேதி இவர் வெளியிட்டஜோதிடம் குறித்த தகவலில் ஜனவரி 25 ம் தேதிக்குப்பின் குஜராத்தில் மிகப்பெரிய இயற்கைச் சீற்றம் ஏற்படும் என்று கூறியிருந்தது நடந்துவிட்டதால் மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.

இந்த முறை, அகமதாபாத், மவுன்ட் அபு மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மேவார் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களையும் பூகம்பம்தாக்கும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார் அம்பாலால். இதனால் ஜமால்பூரில் வசிக்கும் வியாபாரிகள் தங்கள் கடைகளை பிப்ரவரி 3 ம் தேதிதிறக்க வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+