குஜராத் போகிறது சிறுவாணி தண்ணீர்
கோவை:
குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சிறுவாணி குடிநீரை "பாக்கெட் செய்து அனுப்ப கோவைஆவின் நிறுவனம் முன் வந்துள்ளது.
இந்த பாக்கெட்டுகள் ரயிலில் செல்லவிருக்கின்றன. இது தவிர ஒரே நாளில் 23 லட்ச ரூபாய் நிதியை பொதுமக்கள்மற்றும் நிறுவனங்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளன.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில்இருந்தும் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கோவை நகர மக்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்த பொருள் உதவிகளை ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுசெய்துள்ளது. இதன்படி, கோவையிலிருந்து புகழ் பெற்ற சிறுவாணித் தண்ணீரை பாக்கெட்டுகளில் அடைத்துஅனுப்ப மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆவின் ஆகியவை ஏற்பாடு செய்து வருகிறது.
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போதைய அத்தியாவசியத் தேவை குடிநீர், உணவு மற்றும்உடைகள் மற்றும் மருந்துகள். இவை அனைத்தையும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் பாரதிய ஜனதாஅலுவலகங்களில் குவித்து வருகின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்தி "பேக் செய்யும் பணிகளில் என்.சி.சி மற்றும்பா.ஜ தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications