ஆளுநரின் அப்பீல் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நால்வர் சிண்டிகேட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய தமிழக ஆளுநர்பாத்திமா பீவியின் மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எஸ்.சண்முக சுந்தரம், கே.எம்.கருப்பண்ணன், கே.எஸ்.சுந்தர்ராஜன், மற்றும் என்,தாணுலிங்கம் ஆகியோர்பல்கலைக்கழக விதிப்படி நடந்த சிண்டிகேட் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.
தேர்தலுக்குமுன் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் என்று பல்கலை. தேர்தல் விதியில் இல்லை.
எனவே அவர்களை நீக்கும் ஆளுநரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது சரியே என்று ஆளுநரின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications