இந்திய-இங்கிலாந்து இளைஞர்கள் மோதல் .. கிரிக்கெட்டில்
ஹைதராபாத்:
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையே இளைஞர் கிரிக்கெட் ஒரு நாள் போட்டித்தொடர் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
நிறைய ஒரு நாள் போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றது இங்கிலாந்து அணி. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
முதல் போட்டியிலேயே வெற்றிபெற விரும்பும் இரு அணிகளிலும் பேட்டிங் வலுவாக உள்ளது.எனவே, இப்போட்டி சமபலம் வாய்ந்த இரு அணிகளுக்குஇடையேயானது என்கிறார் இந்திய அணிப் பயிற்சியாளர் ரோஜர் பின்னி.
முன்னதாக குஜராத்தில் நடைபெறுவதாக இருந்த இப்போட்டித் தொடர் பூகம்பத்தை அடுத்து ஆந்திராவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் நகரில் நடைபெறவிருந்த முதல் மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகள் ஹைதராபாத் நகரில் வெள்ளி மற்றும்செவ்வாய்க் கிழமைகளிலும், பரோடாவில் நடைபெற வேண்டிய 2வது ஒரு நாள் போட்டி விஜயவாடாவில் ஞாயிற்றுக் கிழமையும் நடைபெறவுள்ளன.