நிரந்தர கமிட்டி அமைகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பது மற்றும் அவசர கால நிலைமையைக் கையாளுவதுகுறித்த பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளும் இடம் பெறும் நிரந்தர கமிட்டியை அமைக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் இதுகுறித்து சனிக்கிழமை டெல்லியில்செய்தியாளர்களிட்ம் பேசுகையில், இதுதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர்வாஜ்பாய் கூட்டியிருந்தார். இரண்டரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டது.
குஜராத் பூகம்பம் போன்ற அவசர கால நிலை ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கான பணிகளை அரசுடன் சேர்ந்துஇந்தக் கமிட்டி மேற்கொள்ளும் என்றார் மகாஜன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications