For Daily Alerts
Just In
சுரங்கத்திற்குள் சிக்கிய 38 பேரை மீட்க தீவிர முயற்சி
ராஞ்சி:
பீகார் மாநிலம் ராஞ்சி அருகே பக்திகி என்ற இடத்தில் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை மீட்க தீவிரநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சுரங்கத்திற்குள் வெள்ளிக்கிழமை நீர் புகுந்து விட்டது. இதனால் சுரங்கத்திற்குள் பணியில் இருந்த 51 பேர்சிக்கிக் கொண்டனர். தண்ணீர் இறைக்கும் பம்புகள் மூலம் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நீச்சல் வீரர்களும் சுரங்கத்திற்குள் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால், மீட்புக் குழுவினர் முழுமையாக உள்ளே செல்ல முடியவில்லை.இதுவரை 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் கதி குறித்துத் தெரியவிலலை. இவர்கள் உயிருடன்இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]