தொகுதி பங்கீடு .. மேலிடத்திற்கு பாண்டி. காங். கோரிக்கை
பாண்டிச்சேரி:
கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசும் முன் பாண்டிச்சேரி காங்கிரஸ்கட்சி நிர்வாகிகளிடம் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என கட்சி தலைமையிடம்பாண்டி. காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், பாண்டிச்சேரிமுதல்வர் சண்முகத்துடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்குலாம் நபி ஆசாத்தை சந்தித்து பேசினேன்.
பல கட்சிகள் மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெற விரும்புவதால் கட்சி தலைமைபாண்டி காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் தொகுதி பங்கீடு குறித்துமுடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.
தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்ய குழு அமைக்கவிருப்பதாக ஆசாத்தெரிவித்துள்ளார். ஆசாத் தலைமையிலான குழு அடுத்த மாதம் 9 மற்றும் 10-ம் தேதிபாண்டிச்சேரிக்கு விஜயம் செய்யும்.
அப்போது அவர்கள் எந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாகக்குறுதிகளைநிறைவேற்றியுள்ளது என ஆராய்வார்கள் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications