எதிரிகளுக்கு மரணஅடி கொடுப்போம் .. பரூக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண எடுத்துவரும் நடவடிக்கைகள் அமைதி காண உதவவில்லை எனில் மத்திய அரசு வேறு வழிவகைகளை காண வேண்டும்என்று காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் வங்கியின் 419வது கிளையை சென்னையில் தொடங்கி வைத்து பேசிய பரூக் நீண்ட நாட்களாக நீடிக்கும் இப்பிரச்சினையில் காஷ்மீர் மக்கள்இழந்தது ஏராளம். எனவே, அமைதி முயற்சிக்கு பாகிஸ்தானை ஒத்துக்கொள்ள வைக்க மற்ற வழிகளை காணவேண்டும் என்றார்.

மற்ற வழிமுறைகள் எவை எனக் குறிப்பிடாத முதல்வர், காஷ்மீரின் எப்பகுதியும் பாகிஸ்தானுடன் இணையாது. அதனை ஒரு முதல்வர் என்ற முறையில்தெரிவிக்கவில்லை இந்த மண்ணில் பிறந்தவன் என்ற முறையில் தெரிவிக்கிறேன் என்றார்.

எல்லையில் சண்டைநிறுத்தத்தை அறிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்த பாரூக், நாட்டில் பரவியுள்ள தீவிரவாதத்தை அழிக்க மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார்.

வெள்ளியன்று அப்பாவி மக்கள் பலரும், ராணுவ வீரர்கள் 9 பேரும் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவித்த அமைதியை நிலைநாட்டுவதற்காகஉயிர்கள் பலவற்றை இழந்துவிட்டோம்.

நீண்ட நாட்கள் நடைபெற்று வரும் நேரடி மற்றும் மறைமுக போரில் உயிரிழப்பு, பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ளதீவிரவாதிகள் விரும்புவது என்ன என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். சண்டையை இந்தியா துவக்க விரும்பவில்லை எனினும் சண்டை வரும் போதுஅதில் எதிரிகளுக்கு மரணஅடி கொடுப்போம் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+