For Daily Alerts
Just In
பா.ம.க.வுக்கு இடமில்லை .. ஜெ. கூறுகிறார்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லை. அதிமுககூட்டணி ஏற்கனவே முடிவாகி விட்டது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி முடிவாகி விட்டது.எனவே அடுத்த கட்டமாக, தொகுதிப் பங்கீடு குறித்து பேசவுள்ளோம்.
எந்தக் கட்சிக்காகவும், யாருக்காகவும் நாங்கள் காத்திருக்கவில்லை. பா.ம.க. எங்கள் கூட்டணியில் சேர வேண்டும்என்று நாங்கள் காத்திருக்கவில்லை என்றார் ஜெயலலிதா.
Comments
Story first published: Sunday, February 4, 2001, 5:30 [IST]