70 அசாமியர்கள் "மிஸ்ஸிங்
Subscribe to Oneindia Tamil
தேஜ்பூர் (அசாம்):
குஜராத் மாநிலம் சூரத் மற்றும் ஜாம்நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அங்கு வசித்து வந்த 70 அசாமியர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.
இவர்கள், அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் பெஹாலி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். காணாமல் போன 70 அசாமியர்களின் குடும்பத்தினர்கூறுகையில், நாங்கள் முடிந்த அளவு தொடர்பு கொண்டு பார்த்து விட்டோம். பூகம்பத்தில் அவர்களது நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லைஎன்றார்கள்.
காணாமல் போனவர்களது குடும்பத்தார், குஜராத் முதல்வர் கேசுபாய் படேலுக்கு கடிதம் மூலம், குஜராத்தில் உள்ள அசாமியர்கள் எங்குஇருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications