கருணாநிதி, ராமதாஸுக்கு தகுந்த பாதுகாப்பு .. புதுவை உறுதி
புதுவை:
புதுவை வரும் தமிழக முதல்வர் கருணாநிதியையும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர்.ராமதாஸையும் கொல்ல சதி என்ற தகவல் தவறானதுஎன்று புதுவை போலீஸ் கண்காணிப்பாளர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.
புதுவை விஜயத்தின் போது தமிழகத் தலைவர்கள் இருவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த அவர்,
போலீசாரைக் கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள சாமிதுரை என்பவரிடமிருந்து தமிழகத் தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்கானஆதாரங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றார்.
தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்றுக் கருதப்படும் சாமிதுரை மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தில் பஸ் எரிப்பு சம்பவம் உள்பட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.
சமீபத்தில் புதுவை மோகன் நகர் பகுதியில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில் குண்டு வெடித்தது தொடர்பாக அவ்விடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தடயங்களைதடய அறிவியல் துறையினரின் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications