வீரப்பனின் புதிய "தோஸ்த்

Subscribe to Oneindia Tamil

பண்ணாரி:

வீரப்பனின் புதிய வலதுகரமாக பண்ணாரியைச் சேர்ந்த சந்திர கவுண்டர் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

வீரப்பன் மீண்டும் செய்தியாகியிருக்கிறான். கேரள, தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள செம்மந்தி மலை என்றகாட்டுப் பகுதியில் வீரப்பன் தலைமையிலான கும்பலுக்கும், தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே, 2நாட்களுக்கு முன்பு நேரடி மோதல் நடந்தது.

இதில் வீரப்பன் கும்பல், தங்களிடமிருந்த பொருட்களைப் போட்டு விட்டுத் தப்பியது. இந்தக் கும்பலில் புதிதாகஒரு நபர் இணைந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. அவர்தான் சந்திர கவுண்டர். இவர்தான் இப்போதுவீரப்பனின் வலதுகரமாக இருக்கிறார்.

மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் சந்திர கவுண்டர். மாடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தார். 8வருடங்களுக்கு முன்பு அவருக்கு வீரப்பனுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அவனுடன் சேர்ந்தார். பணம்தான்இதற்குக் காரணம்.

கர்நாடக அதிரடிப்படை வீரர்களின் திட்டம் குறித்து இவர் மூலம், வீரப்பன் பல தகவல்களைத் தெரிந்து கொள்வதுவழக்கம். துப்பாக்கிகளை கையாள்வது, காட்டுப் பாதைகளில் நன்கு செல்வது என சகல வித்தைகளையும் சந்திரகவுண்டர் தெரிந்து வைத்திருந்ததால், வீரப்பனின் புதிய வலதுகரமாக மாறியிருக்கிறார் கவுண்டர்.

ஏற்கனவே சேத்துக்குளி கோவிந்தன் வீரப்பனின் தளபதியாக இருக்கிறான். இப்போது சந்திர கவுண்டரும்சேர்ந்திருப்பதால், வீரப்பனுக்குக் கூடுதல் பலம் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய மோதலில் போலீஸார் சுட்டதில், கவுண்டர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+