பூகம்பம் குறித்து ஆலோசனை
கவுஹாத்தி:
இயற்கை சீரழிவை சமாளிப்பது பற்றிய வடகிழக்கு மாநிலங்களின் கூட்டம் இவ்வார இறுதியில் அஸ்ஸாமில் நடைபெறவுள்ளது.
அதிக பூகம்ப பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களில் நாட்டிலேயே கடுமையான பூகம்பம் பாதித்தது.அதன் அளவு 8.7 ரிச்டர் அளவாகும்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் போன்று அஸ்ஸாமில் ஏற்பட்டால் அதை சமாளிப்பது பற்றிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக கவுஹாத்திமாவட்ட நீதிபதியும் கவஹாத்தி நகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான தீரேந்திர நாத் சைக்கியா தெரிவித்தார்.
1897 பூகம்பத்தில் 1600 பேரும், 1950 பூகம்பத்தில் 1500க்கும் மேற்பட்டோரும் பலியாயினர். 1950ல் அஸ்ஸாமைத் தாக்கிய பூகம்பத்தின்அளவு 8.5.
அங்கு தற்போதுள்ள கட்டிடங்களில் 51 கட்டிடங்கள் பூகம்பத்தை தாங்கக் கூடியவை அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது. அது பற்றிய செய்தி பத்திரிகையில்வெளியானதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
அவ்வாறான கட்டிடங்களின் பெயர்களை வெளியிடுவதோடு அந்த கட்டிடங்களை கட்டியவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று ஒரு வீட்டடி மனைவிற்பனையாளர் தெரிவித்தார்.
மற்றொரு கட்டிடக்கலை பொறியாளர் கூறும் போது இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் பூகம்பத்தை தாங்கும் வகையில் அதற்கான வழிமுறைகளோடுகட்டப்படுவதால் குஜராத்தில் ஏற்பட்டது போன்று இழப்புக்கள் நேராது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications