அடுத்த குறி காட்மாண்டு?
காட்மாண்டு:
காட்மாண்டுவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் பொதுமக்களும், அரசும்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நேபாளத்தைச் சேர்ந்த மண்ணியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நேபாள மண்ணியல் துறை வல்லுநர் மகேஷ் நாக்ராமி கூறுகையில், கடந்த 11 நாட்களுக்கு முன்குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து பெரிய அளவில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும்ஏற்பட்டது.
இதே போல் காட்மாண்டுவிலும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால்பூகம்பத்தைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வீடுகளைக் கட்ட வேண்டும். அல்லது பூகம்பத் தடுப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட வேண்டும்.
காட்மாண்டு நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் பல மாடிக் கட்டிடங்கள் நிலநடுக்கத்தால்பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.
மண்ணியல் துறை இன்னொரு விஞ்ஞானி கோபால் டோங்கால் கூறுகையில், காட்மாண்டுவில் உள்ள மண்நெகிழ்வுத்தன்மை கொண்டது. இங்கு சோபார் என்ற மலைப்பகுதியில் உள்ள மண்ணும் மிகவும் இளகிய தன்மைகொண்டது. இதனால் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது.இங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
காட்மாண்டுவில் 1934 ல் 8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின்போது 4,000 பேர் இறந்தனர்.இதே போல் பேராபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
தற்போது காட்மாண்டு நகரில் உள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டவை அல்ல.இதனால் நிலநடுக்கத்திலிருந்து தப்பிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.