தேர்தல் பணிகளில் ம.தி.மு.க. தீவிரம்
திருச்சி:
தமிழக சட்டசபையில் அதிகமான இடங்களை பெற்று தங்களுக்கென தனி இடம் பெறும் முயற்சியில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஜெயலலிதாதலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும்ம.தி.மு.க. இந்த முறை தமிழக சட்டசபையில் கணிசமான இடங்களை வென்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்களைசட்டசபைக்கு அனுப்பி தங்கள் கட்சியின் தனித்தன்மையை நிலை நாட்டுவதில் மும்முரமாக உள்ளது.
இதற்காக எந்தெந்த இடங்களில் கட்சிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. யார், யாரை தேர்தலில் நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு அதிகம் என்பவை குறித்து அறிந்து தெரிவிக்குமாறு தனியார் நிறுவனம் ஒன்றிடம்கேட்டுக்கொண்டுள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அந்த நிறுவனம் இது குறித்து ரகசிய சர்வேஎடுத்து வருகிறது.
மேலும் மாவட்டம் தோறும் நிதியளிப்பு கூட்டம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துமாறு வைகோ கட்சியினருக்குஉத்தரவிட்டுள்ளார். இது கட்சியில் உள்ள கோஷ்டி பூசலை மறந்து அனைவரும் ஒன்றாக செயல்பட உதவும் எனஅவர் நம்புகிறார். தன் கட்சி எம்.எல்.ஏ.க்களை கணிசமான அளவில் தமிழக சட்டசபைக்கு அனுப்ப வைகோஎடுத்து வரும் முயற்சி வெற்றி பெறுமா என்பதற்கு வாக்காளர்கள் தான் பதில் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications