காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வாஜ்பாய் முன்வர வேண்டும்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ்முஷாரப் வலியுறுத்தினார்.
இங்கு நடைபெற்ற காஷ்மீர் குறித்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முஷாரப், அமைதி திரும்ப பாகிஸ்தான் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் இந்தியாவின்முயற்சியை பொறுத்தே அமையும்.
பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முயற்சிப்பது அதன் பலவீனத்தை குறிக்காது. மக்கள்தொகை மிகுந்த பிராந்தியத்தில் நிலவும் காஷ்மீர் பிரச்சினைதீர்க்கப்பட வேண்டியது என மக்கள் விரும்புகின்றனர். இப்பிரச்சினை தீராவிடில், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் முன்னேற்றம் காணமுடியாது.
ஹூரியத் அமைப்பினர் பாகிஸ்தான் வந்து காஷ்மீரிகளையும், பாகிஸ்தான் அரசையும் சந்தித்து பேச வேண்டும். அதன் பிறகே இப்பிரச்சினையில் முன்னேற்றம்காணப்படும் என்றார்.
பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபர் சர்தார் இப்ராஹிம் கான் மற்றும் பிரதமர் பாரிஸ்டர் சுல்தான் மகமூத், ராணுவ அதிகாரி லெப்டினன்ட்ஜெனரல் ஜம்ஷேத் குல்ஷார் உள்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications