கூட்டணியிலிருந்து விலகல் ..ராமதாஸ் கடிதம்
டெல்லி:
பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதன்தலைவர் ராமதாஸ் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நாம் ஆரம்பித்த தேசியஜனநாயக கூட்டணியின் தமிழக நிலைமை தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைஅக்கூட்டணியில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது.
அக்கூட்டணியிலிருந்து விலகினாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்நோக்கிலிருந்து பா.ம.க விலகாது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் பிரச்சினைகள் வரும் போது தங்களுக்குபா.ம.க. எல்லா வகையிலும் உதவி கரமாக இருக்கும்.என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி, தேசீய ஜனநாயககூட்டணியின் கூட்டத்தில் பிரச்சினைகள் குறித்து விவாதித்து சுமுக முடிவு காணப்படும்என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications