For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமேஸ்வரத்தில் கோலாகலமாக கும்பாபிசேஷகம்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் சிவாய நமஹ சிவாய நமஹ என ஜபிக்க ராமேஸ்வரம் ராமநாத சுவாமிகும்பாபிஷேகம் 26 ஆண்டு இடைவெளிக்குப்பின் மிக விமரிசையாக நடை பெற்றது.

சிவஸ்தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயில். இந்த கோவிலின்கும்பாபிஷேம் 26 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் திங்கள்கிழமை காஞ்சி காமகோடி மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள், சிருங்கேரிசுவாமிகள் ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிக ஆகியோரால் நடத்தப்பட்டது. இவர்கள்கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த புனித நீரால்கும்பங்களுக்கு அபிஷேகம் செய்வித்தார்கள்.

காஞ்சி மடத்தின் இளைய சுவாமிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மதுரை ஆதினத் தலைவர்அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், துவாரக சங்கராச்சாரிய ஸ்ரீ சுவரபூதானந்த சுவாமிள் ஆகியோரும் இந்தகும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்குடிமகனும் இந்த விழாவில் பங்கேற்றார். இவர் கும்பாபிஷேககலசத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தார்.

தி.மு.க. அமைச்சர்களிலேயே இவர் ஒருவர்தான்வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒன்றரை மணி நேரகும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பாபிஷேக விழாவையொட்டி ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த மூலஸ்தானம் திங்கள்கிழமை பக்தர்களின்தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில்பங்கேற்றனர்.

போலீசார் செய்திருந்த விரிவான ஏற்பாடுகளால் கும்பாபிஷேக விழா எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல்நடந்தேறியது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X