கிரிக்கெட் பயிற்சி முகாம் .. புதன்கிழமை துவங்குகிறது
சென்னை:
ஆஸ்திரேலிய அணியுடான கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி முகாமை, இந்திய கிரிக்கெட் வீரர்கள், 7-ம் தேதிபுதன்கிழமை சென்னையில் துவங்குகின்றனர்.
சென்னையிலுள்ள செம்பிளாஸ்ட் மற்றும் எம்.ஆர்.எப் வேகப் பந்துவீச்சு பயிற்சிக் கழக மைதானத்தில் பயிற்சிமுகாம் நடைபெறுகிறது. பிப்ரவரி 11-ம் தேதி பயிற்சி முகாம் முடிவடைகிறது.
மொத்தம் 25 வீரர்கள் பயிற்சி முகாமுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிலிருந்து இறுதி அணி தேர்வுசெய்யப்படும். ராகுல் சாங்க்வி, பாலாஜி ராவ், தினேஷ் மோங்கியா ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள்.
பயிற்சியாளர் ஜான் ரைட் மற்றும் உடற்பயிற்சியாளர் ஆன்ட்ரூ லெபஸ் ஆகியோரின் மேற்பார்வையில் முகாம்நடக்கவுள்ளது.
பயிற்சி முகாமின் இரண்டாவது கட்டம், பிப்ரவரி 16 முதல் 18 அல்லது 19 வரை இருக்கும். காலை மற்றும்மாலையில் பயிற்சி இருக்கும்.
25 வீரர்களின் பெயர்கள், மாநிலங்கள் விவரம்:
சவுரங் கங்குலி (மே.வங்கம்), சச்சிடன் டெண்டுல்கர் ( மகாராஷ்டிரா), ராகுல் டிராவிட் (கர்நாடகா), சடகோபன்ரமேஷ் (தமிழ்நாடு), எஸ்.எஸ்.தாஸ் (ஒரிஸ்ஸா), வி.வி.எஸ்.லட்சுமண் (ஹைதராபாத்), தினேஷ் மோங்கியா(பஞ்சாப்), ஹேமங்க் பதானி (தமிழ்நாடு), முகம்மது கைப் (உ.பி.).
ஸ்ரீநாத் (கர்நாடகா), ஜாஹீர் கான் (பரோடா), அஜித் அகர்கர் (மும்பை), தேபஷிஷ் முகர்ஜி (ஒரிஸ்ஸா), ஆஷிஷ்நெஹ்ரா (டெல்லி), வெங்கடேஷ் பிரசாத் (கர்நாடகா), சுரீந்தர் சிங் (ஜம்மு-காஷ்மீர்).
ராகுல் சாங்க்வி (டெல்லி), முரளி கார்த்திக் (ரயில்வே), பாலாஜி ராவ் (தமிழ்நாடு), சரந்தீப் சிங் (பஞ்சாப்), ஹர்பஜன்சிங் (பஞ்சாப்), வெங்கடபதி ராஜு (ஹைதராபாத்), சுனில் ஜோஷி (கர்நாடகா).
19-ம் தேதி இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications