சீராகும் இந்தியா பாலம்
டெல்லி:
ஜனவரி 26 ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, கட்ச் மாவட்டத்தையும், அங்குள்ள தேசியநெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியை விரைவில் முடிக்ககுஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
கட்ச் மாவட்டத்தில் உள்ளது பழைய சூரஜ் பாரி பாலம். இந்தியா பாலம் என்றும் அழைக்கப்படும் இந்தப் பாலம்மூலம் தான் பாகிஸ்தான் வாகனங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு வர முடியும்.
குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து இந்தப் பாலம் முழுவதும் சேதமடைந்தது. இதனால்போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, குஜராத் மாநில சாலைப் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ஜாம்தார் கூறுகையில்,பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இந்த பாலத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த 3மாதங்களுக்குள் பாலம் சீரமைக்கும் பணி முடிவடையும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.