பஸ் மோதி 4 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே பஸ் மோதி நான்கு குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாயினர்.
சேலம் அருகே உள்ள ராசிபுரத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்தப் பஸ்,திம்மநாயக்கன்பட்டி வழியாகச் சென்றது. அப்போது ஒரு திருப்பத்தில் பஸ் டிரைவர் எதிரே வந்த வாகனத்திற்குவழி விட ஒதுங்கினார்.
அந்த சமயத்தில் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. பஸ் எதிர்பாராத விதமாக அவர்கள் மீதுமோதியது.
இந்த விபத்தில் அந்த ஊரைச் சேர்ந்த குழந்தைகள் வெண்ணிலா (10), ராஜ்குமார் (7), வெங்கடேஷ் (8),சின்னம்மாள் (60), ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். குமரன் (6), என்ற சிறுவன் மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிசசை பலனின்றி இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications