ஜம்முவில் ஊரடங்கு வாபஸ்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்முவில் நான்கு நாட்களாக அமலில் இருந்து வந்த பகல் நேர ஊரடங்கு, வியாழக்கிழமை விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது.
ஜம்முவில் நடந்த உயல் மட்ட அளவிலான கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. காலை 6மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.
பதற்றம் நிறைந்த நானக் நகர், டிகியானா ஆசிரமம், நார்வால் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் வெளியில் செல்லவும், வழக்கம் போலஇயங்கவும் அனுமதிக்கப்பட்டார்கள்.
சமீபத்தில் சீக்கியர்கள் சிலர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்கள் போராட்டத்தில்இறங்கினார்கள். ஜம்முவில் நடந்த போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர்இறந்தார்.
இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தைக் குறைப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications