தேங்கிக் கிடக்கும் ரூ. 190 கோடி பட்டுச் சேலைகள்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதிலும் ரூ. 340 கோடி மதிப்புள்ள பட்டுச் சேலைகள் தேங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கோஆப்டெக்ஸ் பிரிவு இயக்குநர் கே.எஸ்.திருவேங்கடம் கூறியுள்ளார்.
காஞ்சீபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாநிலம் முழுவதிலும் உள்ள கோ ஆப்டெக்ஸ்கொடவுன்களில் ரூ. 190 கோடி மதிப்புள்ள பட்டுச் சேலைகளும், ரூ. 150 கோடி மதிப்புள்ள பருத்தி ஜவுளிகளும்தேங்கிக் கிடக்கின்றன.
இந்த துணி ரகங்களை விற்க வேண்டுமானால், விலையில் தள்ளுபடி செய்ய மாநில அரசு அனுமதிக்க வேண்டும்.அப்போதுதான் இவை அனைத்தையும் விற்க முடியும்.
அதிக அளவிலான உற்பத்தி காரணமாகவே இந்த அளவு ஜவுளி ரகங்கள் தேங்கிக் கிடக்கக் காரணம். காஞ்சீபுரம்மாவட்டத்தில் மட்டும் ரூ. 65 கோடி மதிப்பிலான பட்டுச் சேலைகளும், ரூ. 50 கோடி மதிப்புள்ள பருத்தி ரகங்களும்தேங்கிக் கிடக்கின்றன என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications