திமுக கூட்டணியில் சேரத் தயார் .. கிருஷ்ணசாமி
சென்னை:
திமுக கூட்டணியில் சேர தயாராக உள்ளோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிகூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி திமுக அணியிலிருந்து விலகி, அதிமுக அணிக்குச் சென்று விட்டது. இதனால் தமிழகஅரசியல் கூட்டணிகளில் வரும் நாட்களில் விலகல் மற்றும் சேருதல் படலங்கள் அரங்கேறும் வாய்ப்புஅதிகரித்துள்ளது.
தற்போதைக்கு தலித் கட்சிகள்தான் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளன. டாக்டர் கிருஷ்ணசாமிதலைமையிலான புதிய தமிழகம் கட்சியும், திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பும்தான் மிகப் பெரிய தலித் கட்சிகள்.
திருமாவளவன், மூப்பனார் என்ன சொல்கிறாரோ அதையே வழிமொழிவார். கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரைபா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெற மாட்டார் என்ற நிலை உள்ளது. எனவே அவர் திமுக பக்கம் சாயலாம்என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில், திமுக கூட்டணியில் சேர தயார் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி. சென்னையில்புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்துஆட்சேபனையில்லை. திமுக தரப்பில் அழைப்பு வந்தால் கூட்டணி குறித்துப் பேசத் தயார்.
எங்களது கட்சி இப்போது நல்ல நிலையில், வலுவான செல்வாக்குடன் உள்ளது. தலித் மக்களைக் கண்ணியமாகமதித்து நடக்கும் கூட்டணியில் சேர ஆர்வமாக உள்ளோம் என்றார் அவர்.