விஜய் அமிர்தராஜின் அடுத்த "அவதாரம்
நியூயார்க்:
ஐக்கியநாடுகள் சபையின் 8வது அமைதித் தூதராக இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் நியமிக்கப்படுகிறார்.
இது பற்றிய தகவல்களை புதனன்று தெரிவித்த ஐ.நா.அதிகாரிகள் இதற்கான முறையான அறிவிப்பை ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னான்வெளியிடுவார் எனத் தெரிவித்தனர்.
முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி, பத்திரிக்கையாளரும் மனிதஉரிமைக்காக குரல் கொடுப்பவருமான அன்னா கேடால்டி, நடிகர் மைக்கேல்டக்ளஸ், பிரஞ்ச்-அல்ஜீரிய பாடகர் என்ரிகோ மசியஸ், ஓபரா கலைஞர் லூசியானா பவரோட்டி, எழுத்தாளர் எலி வீஸல் மற்றும் கூடைப்பந்தாட்ட வீரர்மாஜிக் ஜான்சன் ஆகியோர் ஏற்கனவே ஐ.நா.அமைதி தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
17 ஆண்டுகள் பல்வேறு தேசீய மற்றும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலும், 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் பங்குபெற்றவர் விஜய் அமிர்தராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
1992லிருந்து விம்பிள்டன் உள்ளிட்ட பல்வேறு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் ஒளிபரப்பில் ஸ்டார் டி.வி.க்கு உதவி வருகிறார்.
எய்ட்ஸ்க்கு எதிராக குரல் கொடுத்து வரும் அமிர்தராஜ் தற்போது குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதி வசூலித்துவருகிறார்.
ராய்ட்டர்ஸ்












Click it and Unblock the Notifications