வீரப்பன் குறித்து துப்பு கொடுத்தவர் காணவில்லை
கோவை:
வீரப்பன் கும்பல் பற்றித் தகவல் கொடுத்த ஆதிவாசி ஐயப்பன் காணவில்லை. இதனால் போலீசார்அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிரடிப்படையினருக்கு வழிகாட்டியாகவும்,வீரப்பன் கும்பல் பதுங்கியிருப்பது குறித்து நம்பகமான தகவல்களையும் அளித்து வந்தவர் ஐயப்பன்.
கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த தகவலின் பேரில்தான் செம்மந்தி மலையில் வீரப்பன் கும்பலுடன் போலீசார்துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஐயப்பனுக்குப் போலீசார் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம்வழங்கினர்.
மேலும் துப்புக் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற ஆவலில் மலைப் பகுதிகளை சுற்றித்தகவல்களை சேகரித்து போலீசாருக்கு அளித்து வந்தார் ஐயப்பன். ஆனால் திடீரென ஐயப்பனைக் காணவில்லை.இதனால் அதிரடிப்படையினர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அதிர்ச்சிடையந்துள்ளனர்.
வீரப்பன் கும்பல், ஐய்யப்பனைக் கடத்திச் சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். அவரது மனைவிகமலா கூறுகையில், எனது கணவரின் பெயர் எதுவும் ரகசியாக வைக்கப்படவில்லை. பத்திரிகைகளில் அவரதுபடம் வெளி வந்துள்ளது. எனவே எனது கணவரின் உயிருக்கு வீரப்பனால் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புஉள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.