மருத்துவமனையில் கருணாகரன்
திருவனந்தபுரம்:
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கருணாகரன்பக்கவாதம் காரணமாக வியாழக்கிழமை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருணாகரனுக்கு 82 வயதாகிறது. அவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததுஎன அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள்மேலும் கூறியதாவது:
கருணாகரன் முதலில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் அதன் பின் அவர் புற்றுநோய் மைய மருத்துவமனைக்குமாற்றப்பட்டார். பின் மீண்டும் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டுவரப்பட்டார். இங்கு இவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறினர்.
கருணாகரன் காங்கிரஸ் கட்சியில் முன்பு கிங் மேக்கர் என்றே அழைக்கப்ட்டுவந்தார்.1991-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமாவதற்கு இவரே முக்கிய காரணம்.
ஆனால் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரானவுடன், அவருடனுள்ள சோனியாகாந்தியின் பிரத்யேக உதவியாளர் வின்சென்ட்ஜார்ஜ், ஏ.கே. ஆன்டனி மற்றும்இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் செனிதாலா போன்றவர்களால் தான்ஒதுக்கப்படுவதாக குற்றம் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.