"நல்லவர்களுக்கே நாடார்களின் ஓட்டு
சேலம்:
கட்சிப் பாகுபாடின்றி நல்லவர்களுக்கே ஓட்டுப் போடுவோம் என அகில இந்திய நாடார் இளைஞர் பேரவைஅறிவிக்கவுள்ளது.
அகில இந்திய நாடார் பேரவையின் 3-வது மாநல மாநாடு சேலத்தில் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்கிறது. மாநாடுகுறித்து அகில இந்திய நாடார் பேரவையின் மாவட்டத் தலைவர் பாலச் சந்திரன் தெரிவித்ததாவது:
பனைத் தொழிலாளர்கள், கள் இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு அரசு உரிய உரிமம்வழங்க வேண்டும். நாடார் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அடுத்து வரும் தேர்தலில் அதிகபட்ச இடங்களில் ஒவ்வொரு கட்சியும் நாடார் சமூகத்தவர்களை சேர்க்க வேண்டும்.மேலும், அரசியல் கட்சியினர் தகுதி வாய்ந்தவர்களையே தேர்தலில் நிறுத்த வேண்டும்.
நல்லவர் என்ற அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்வோருக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். கட்சிஅடிப்படையில் இல்லாமல் நல்லவர்களுக்கு மட்டுமே ஓட்டளிப்போம்.
எங்களது உரிமைக்காக யார் முன்னின்று போராடத் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராகஉள்ளோம். சேலத்தில் நடக்கும் இந்த 3 வது மாநில மாநாட்டில் அனைத்து நாடார் பேரவையைச் சேர்ந்தவர்களும்கலந்து கொள்ளவிருக்கிறோம். இதற்கு அகில இந்திய நாடர் பேரவைத் தலைவர் சுதர்சன் தலைமை வகிக்கிறார்.நெல்லை நெடுமாறன் கலந்து கொள்கிறார் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications