For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களமிறங்கும் லொள் ..லொள்

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா:

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக நாய்களும் களம் இறங்குகின்றன.

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக நூதன முறையில், நிதி வசூல் செய்ய கொல்கத்தாவில் முடிவுசெய்திருக்கிறார்கள். 60 விதமான நாய்களை ஊர்வலமாக 5 கிலோமீட்டர் நடக்க வைத்து நிதி வசூல் செய்வதேஇந்த நூதன ஐடியா. ஞாயிற்றுக்கிழமை இந்த நாய் ஊர்வலம் நடக்கிறது. மாநில போக்குவரத்து அமைச்சர் சுபாஷ்சக்ரவர்த்தியின் ஐடியாதான் இது.

கொல்கத்தாவிலுள்ள லேக் மார்க்கெட் பகுதியிலிருந்து பவானிப்பூர் கல்விக் கல்லூரி வரை இந்த நாய்கள் நடக்கும்.நாயுடன் கூட வருவோர், பொதுமக்கள் தரும் நன்கொடைகளைப் பெற்றுக் கொள்வார்கள். பின்னர், இந்தப்பொருட்கள் அனைத்தும் குஜராத் நிவாரணக் கழகத்திடம் ஒப்படைக்கப்படும். காலை 8 மணிக்குத் துவங்கும் இந்தநாய்ப் பேரணி.

நாய்கள் அணிவகுத்து வரவுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படும். பல்வேறுதொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இது ஒளிபரப்பப்படும்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X