4 மீனவர்கள் இலங்கையிலிருந்து 12ல் விடுதலை
சென்னை:
இலங்கை கடலோர காவற்படையால் சென்ற மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்ட 4தமிழக மீனவர்கள் இந்த மாதம் 12 -ம் தேதி விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.
கோபிநாத், ராமர், மார்கண்டன், வெள்ளைசாமி என்ற இந்த நான்கு மீனவர்களும்இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்றதாக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சென்ற விசைப்படகு இயந்திர கோளாறு காரணமாக நிற்காமல் மிதந்துஇந்திய கடல் பகுதியை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டது.
இந்த நிலையில், 4 பேரும் இந்த மாதம் 12-ம் தேதி விடுவிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தமாதம் 12-ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துசேர்வார்கள்.
அவர்களை மீன்வளத் துறை இணை இயக்குனர் வரவேற்று, அவரவர் ஊருக்குஅனுப்பி வைப்பார். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது எனதெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யு.என்.ஐ.