"கடவுள் அருள் இருந்தால் வீரப்பன் பிடிபடுவான்
கோவை:
வீரப்பனை நேரில் போலீசார் பார்த்துள்ளனர். ஒரே ஒரு துப்பாக்கி மட்டும் அவர்கள் கையில் இருந்ததால் பிடிக்கமுடியவில்லை, கடவுள் கருணையிருந்தால் வீரப்பன் நிச்சயம் பிடிபடுவான் என அதிரடிப்படை கூட்டுத் தலைவர்ஐ.ஜி பாலச்சந்திரன் தெரிவித்தார்.
கோவை அருகே உள்ள பூலுவாபட்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்கள் போலீஸ்சந்திப்பு நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பூலுவாபட்டி பொதுமக்கள் வந்திருந்தனர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துவசதி, மற்றும் டெம்போக்களை போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு கோவையில் நிருபர்களடையே ஐ.ஜி பாலச்சந்திரன் பேசுகையில், பொதுமக்கள்அளிக்கும் தகவல் அடிப்படையில் பல முறை நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். சிலமுறை தோல்விஅடைந்துள்ளோம்.
ஜனவரி 31ம் தேதி வீரப்பன் தப்பிச் சென்றுள்ளான். வீரப்பனை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள்பார்த்துள்ளனர். 5 குழுவினராகச் செயல்பட்டு வந்த இவர்கள் காடுகளில் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது இந்தப் பகுதியில் வீரப்பனை ஒரு குழுவினர் பார்த்துள்ளனர். ஆனால், அவர்களிடம் ஒரே ஒருதுப்பாக்கியிருந்ததால் சுட முடியவில்லை. கடவுள் அருள், கருணை இருந்தால் வீரப்பனை நிச்சயம் பிடித்துவிடுவோம்.
தமிழக கேரள எல்லைப் பகுதியில் வீரப்பன் ஒளிந்திருப்பதை உறுதி செய்து விட்டோம். எனவே வீரப்பனைப்பிடிக்க பொதுமக்கள் தகவல் கொடுத்து உதவ வேண்டும். எங்களிடம் நேரடியாகவோ, அல்லது அந்தந்த ஊர்பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாகவோ, தகவல் அளிக்கலாம்.
வல்லரசான அமெரிக்காவே ஒரு தீவிரவாதியை (பின் லேடன்)ப் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. ஆனால்நம்மால் வீரப்பனை நிச்சயம் பிடிக்க முடியும். அதற்கு உங்கள் ஒத்துழைப்புத் தேவை என்றார்.