For Daily Alerts
Just In
பிரேசிலில் 18,000 கோழிகள் சாவு
ரியோடிஜெனீரோ:
பிரேசில் நாட்டில் கடும் வெயில் அடிப்பதால் விலங்கினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பிரேசிலின் மேற்குப் பகுதியில் உள்ள மூன்று கோழிப் பண்ணைகளில் இருந்த 18,000 கோழிகள் வெப்பத்தைத்தாங்க முடியாமல் இறந்து விட்டன.
வியாழக்கிழமை மட்டும் இந்த பரிதாப உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளில்வைக்கப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சரியாக இயங்காததால் இந்த பரிதாபச் சம்பவம் நடந்ததாக தெரிகிறது.
மூன்று கோழிப் பண்ணைகளும் மாடோ கிராஸ்ஸோ மாநிலத்தில் உள்ளது. இங்கு 40 டிகிரி வரை வெயில்அடிக்கிறது.
கடும் வெயில் காரணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் காட்டுத் தீயும் அதிகரித்து வருகிறது.
Comments
Story first published: Saturday, February 10, 2001, 5:30 [IST]