For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாக்கடையிலிருந்து மீட்கப்பட்ட "விஷ்ணு

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் சாக்கடைக்குள் விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டதால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாண்டிச்சேரியின் முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரில் இருக்கும் சேக்கிழார்தெருவில் உள்ள சாக்கடையில் கால்கள் உடைந்த நிலையில் 5 அடி உயரமுள்ளவிஷ்ணு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதைக் கண்ட மக்கள் இது மதக் கலவரத்தை தூண்டும் விதமாக செய்யப்பட்டவேலையாக இருக்குமோ பயம் கொண்டனர்.

இந்த சிலை பற்றி விசாரித்த போது கிடைத்த தகவல்கள் மக்களுக்கு பெரும்அதிர்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்தது.

இந்த சிலை முத்தியால் பேட்டே முக்கிய சாலையில் இருக்கும் தென்கலை சீனிவாசபெருமாள் கோயிலைச் சேர்தது என தெரிய வந்தது. கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில்இருந்த இந்த சிலையின் கால் பகுதியில் தேரை இருந்தது. தேரை இருக்கும் இடம்அழிந்து போகும் என்பதால் விஷ்ணுவின் கால் வெட்டப்பட்டது.

கால் வெட்டபட்ட சிலை கோவிலில் இருக்கக்கூடாது என்பதால் இந்த சிலை கோவிலில்இருந்து அகற்றப்பட்டு விஸ்வநாதன் நகரில் இருக்கும் காலி மனையில்வைக்கப்பட்டது.

சில பக்தர்கள் பெருமாள் சிலையின் தலையில் இருந்த சிலையின் தலையில் இருந்த 5தலை நாகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று அருகில் ஆதிசேஷ ஆண்டாள்என்ற கோவிலை நிர்மாணித்தனர்.

பல இடங்கள் பல பாகங்களை இழந்த பெருமாள் கடைசியில் சாக்கடையில்வீசப்பட்டுள்ளார் என தெரியவந்தது.

இந்த பெருமாள் சாந்தமான முகத்துடன் மார்பில் லட்சுமியுடனும், கைகளிலும்,கிரீடத்திலும் பூ வேலைப்பாடுடனும் ஜொலிக்கிறார்.

இந்த பெருமாளை அறநிலையத்துறை எடுத்துச் சென்று பாதுகாக்க வேண்டும் எனபக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X