For Daily Alerts
Just In
கூட்டணி .. நிபந்தனை போடுகிறார் ஜான் பாண்டியன்
சென்னை:
புதிய தமிழகம் இடம் பெறும் எந்த கூட்டணியிலும் தமிழக முன்னேற்ற கழக இடம்பெறாது என அக்கட்சி தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எங்களது தேவேந்திர குலவெள்ளாளர் ஜாதியினரை ஏமாற்றிவிட்டார்
நாங்கள் மூன்றாவது அணியில் இடம் பெற மாட்டோம். அதே சமயம், தேர்தலில்தனித்தும் போட்டியிட மாட்டோம்.
இந்த மாதம் 20-ம் தேதி நடைபெறவிருக்கும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின்போது தேர்தல் திட்டங்கள் குறித்த இறுதி முடிவெடுத்தப்படும்
தென் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெற்றியை எங்கள் கட்சிதான் முடிவு செய்யும்என கூறினார்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, February 10, 2001, 5:30 [IST]