சோ ஏன் குற்றம் சாட்டுகிறார்? .. கருணாநிதி வியப்பு
சென்னை:
பிரபல பத்திரிக்கையாளர் சோ, தமிழக முதல்வர் கருணாநிதி தீவிரவாதிகளைஆதரிப்பதாக கூறியதற்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாதிகளை ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாபோன்றோர் கொலப்பட்ட பிறகும், அதற்கு அடுத்த அண்டு ராஜீவ் காந்திகொல்லப்பட்ட பிறகும் ஆதரித்தார் கருணாநிதி என ஆங்கில நாளிதழுக்கு அளித்தபேட்டி ஒன்றில் சோ கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து கடும் கோபத்துடன் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
சோ ராமசாமி தற்போது அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைஆதிரித்து வருகிறார். அவர் ஆதரிக்கும் ஜெயலலிதா 1990 மற்றும் 1991-ம்ஆண்டுஆங்கில பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகளுக்குஆதரவளிப்பதில் தவறில்லை என கூறியிருந்தார்.
வங்கதேசத்திற்கு விடுதலை பெற்று தர இந்தியா பாகிஸ்தானுடன் போரிட்டது. அதேபோல் இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் பெற்று தர இந்தியா இலங்கையுடன் போர்தொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தமிழம்முழுவதும் அதை எதிர்த்து போராட்டம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தது போல் நான்ஆதரவளிக்கவில்லை என என்னை குறை கூறியிருந்தார்.
இதையெல்லாம் மறந்து விட்டு சோ இப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்து என்மீது குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது.
நான் ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னும் விடுதலை புலிகளுக்கு ஆதரவளித்தேன்என்றால் சோ ஏன் 1996-ம் ஆண்டு தேர்தலின் போது த.மா.கா.வுக்கும் தி.மு.க.வுக்கம்உறவு ஏற்படுத்த தூதுவராக செயல்பட்டார்.
இது போன்ற தவறான பிரச்சாரங்களால் திசை மாறி போய்விடக்கூடாது என மக்களைகேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications