"கோர்ட் உத்தரவை மீறுகிறது புதுவை அரசு
பாண்டிச்சேரி:
தன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு துணை சபாநாயகர் அறையின் சாவியைக்கொடுக்காததற்கு அரசியல் பின்னணி இருப்பதாக மனோகர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாண்டிச்சேரியில் மனோகர் அணியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடைசட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்து பாண்டிச்சேரி சபாநாயகர் தீர்ப்பளித்தார். ஆனால்அந்த தீர்ப்பு செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
இசையடுத்து அந்த 3 எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரி சட்டசபைக்கு வந்தனர்.அவர்களுக்கு துணை சபாநாயகர் அறை சாவி தரப்படவில்லை
இந்நிலையில் துணை சபாநாயகர் அறை சாவி தராததற்கு அரசியல் பின்னணி தான்காரணம் என மனோகர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம்கூறுகையில், நீதிமன்றத்தின் உத்தரவை அமல் படுத்த வேண்டியது அரசின் கடமை இந்தஅரசு அதை பின்பற்றவில்லை.
ஆளுநர் ரஜினிராய் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிடுவதாக உறுதிஅளித்துள்ளார் என கூறினார்.
யு.என்.ஐ.