For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறைந்தார் சாவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிரபல பத்திரிகையாசியரும், எழுத்தாளருமான சாவி சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

கடந்த மாதம், சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசியசாவிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை வெள்ளிக்கிழமை மோசமடைந்தது. இரவு 8 மணிவாக்கில் அவர் இறந்தார்.

சாவிக்கு வயது 85. இருந்தும் கூட சுறுசுறுப்பாக தனது பத்திரிக்கைப் பணியையும், எழுத்துப் பணியையும்தொடர்ந்து கவனித்து வந்தார். முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்.

வாஷிங்டனில் திருமணம் என்ற பிரபலமான நாவலை எழுதியவர் சாவி. தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு அவரதுசேவை மகத்தானது. நல்ல, பல செய்தியாளர்களை, ஆசிரியர்களை உருவாக்கியவர்.

சாவியின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின்சார மயானத்தில் சனிக்கிழமை பிற்பகல்நடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X