பாண்டி.யில் அடுத்து தலித்தான் முதல்வர் ..ராமதாஸ்
சென்னை:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு ஒருதலித்தான் முதல்வர் பதவியை ஏற்பார் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் சக்திதாசன் தலைமையில் ராமதாஸ்அ.தி.மு.க. அணியில் சேர்ந்ததற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர்செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், திருமாவளவன், தேர்தல் பாதைதிருடர்கள் பாதை என்று கூறியவர்.
என்னை 17 தலித் இயக்கங்கள் பாராட்டுகின்றன. நான் என்றும் திருமாவளவனை பற்றிவிமர்சனம் செய்தது கிடையாது. ஆனாலும் அவர்தான் என்னை எதிர்க்கிறார். இந்தஅணியில் திருமாவளவனும் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
கருணாநிதி தலித் மக்களுக்காக என்ன செய்தீர்கள் என கேட்டால் தலித்துக்குசம்பந்தியானேன் என சொல்வார். அது தலித் மக்களுக்கு எரிச்சலைத்தான் உண்டுசெய்யும். அ.தி.மு.க.தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டது.
பாண்டிச்சேரியில் முதல்வர் பதவி சுழற்சி முறையில் கொடுக்கப்படும். தலித் நிச்சயம்முதல்வராவார்.அங்கு யார் ஆட்சி என்பதை அன்பு சகோதரி ஜெயலலிதா முடிவுசெய்வார்.
அதே போல் நான் அ.தி.மு.க.அணியில் சேர்த்ததற்கு பாணடிச்சேரி காங்கிரசில் எதிர்ப்புஉள்ளது. பாண்டிச்சேரி பிரச்சனை குறித்த முடிவை அன்பு சகோதரி எடுப்பார்.
த.மா.கா. அ.தி.மு.க. அணியில் நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அ.தி.மு,க.வில்எத்தனை சீட் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை அன்பு சகோதரியின்முடிவுக்கு விட்டுவிட்டேன். த.மா.காவுக்கு அதிக சீட் கொடுத்தாலும் பிரச்சனைஇல்லை.
நாங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தர மாட்டோம். நாங்கள் இப்போது அ.தி.மு.க.அணியில் இருக்கிறோம். இந்த அணி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்.
விடுதலைப்புலிகள் விஷயத்தில் எந்த மாற்றமும் கிடையாது. தொடர்ந்து அவர்களைஆதரிப்போம் என கூறினார்.












Click it and Unblock the Notifications