4.95 மில்லியன் மதிப்பில் ஹைடெக் தொழில் பூங்கா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் 4.95 பில்லியன் டாலர் மதிப்பில் நிறுவப்படவுள்ள ஹைடெக்தொழில்நுட்பப் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில்ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியிலுள்ள இன்பாக் இந்தியா குழும நிறுவனம் இந்த தொழில்நுட்பப்பூங்காவை நிறுவவுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக சிறப்பு பொருளாதாரப் பிரிவின் கீழ்அமைக்கப்படவுள்ள தொழில்நுட்பப் பூங்கா இதுதான்.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்த பூங்கா அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 3182 ஏக்கர்பரப்பளவில் அமையவுள்ள இந்த பூங்காவை நிறுவும் பணியில் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகமும் இணைந்துஈடுபடுகிறது.
நாங்குனேரியில் நடைபெறவுள்ள விழாவில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறனும் கலந்துகொளகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications