கருணாநிதியைச் சந்தித்தனர் பா.ஜ.க. தலைவர்கள்
சென்னை:
முதல்வர் கருணாநிதியை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை மாலைசந்தித்துப் பேசினார்கள்.
தமிழக சட்டசபைக்கு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் வருகிறது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில்சுறுசுறுப்படைந்துள்ளது. இந்த நிலையில், பா.ம.க. அதிமுக கூட்டணிக்குத் தாவி விட்டது.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் கருணாநிதியை, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்பு முதல்வர் கருணாநிதியின்கோபாலபுரம் வீட்டில் நடந்தது.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக தேர்தல் பார்வையாளருமான ராமராவ்,மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் கிருபாநிதி, பொதுச்செயலாளர் இல.கணேசன் ஆகியோர் முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு குறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராமராவ் தேர்தல்பார்வையாளராக நியமிக்கப்பட்டபின் முதல்வர் கருணாநிதியை முதல் முறையாக சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாகும் என்றார்.












Click it and Unblock the Notifications