நல்லாட்சி நடத்துகிறது தி.மு.க... பா.ஜ.க. பாராட்டு
தஞ்சாவூர்:
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் மக்கள் பெருமளவு பயனடைந்துள்ளார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கிருபாநிதி கூறினார்.
தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கிருபாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் பா.ஜ.க. நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் 62 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து,கட்சியின் பலம் என்ன? எதிர் அணியின் பலம் என்ன? வெற்றி வாய்ப்பு எத்தனை சதவீதம் உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
நாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம், தெய்வ பக்தியும், நாட்டுப்பற்றும் கொண்ட ஒருவர்தான் பிரதமராக வர வேண்டும். அந்த வகையில்வாஜ்பாய்க்குத்தான் எங்களுக்கு ஆதரவு என்று மக்கள் கூறுகின்றனர்.
தி.மு.க. வைப் பொறுத்த வரை பொதுமக்களுக்குப் பயன் தரும் வகையில் நல்லாட்சி புரிந்து வருகிறார்கள். உழவர் சந்தை, வருமுன் காப்போம்,சமத்துவபுரம் ஆகிய திட்டங்கள் பேராதரவைப் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்த வரை பா.ம.க. வெளியேறியதால் வெற்றிவாய்ப்பு எவ்விதத்திலும் பாதிக்காது என்றார் கிருபாநிதி.












Click it and Unblock the Notifications