டெஸ்ட் கிரிக்கெட் ரேங்கிங் .. புது விதி வருகிறது
மெல்போர்ன்:
டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணிகளின் ரேங்கிங் பட்டியல் வெளியிட புது முறைகள் அமல்படுத்தப்பட உள்ளன என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்தலைவர் மால்கம் கிரே தெரிவித்தார்.
மே மாதம் பாகிஸ்தானின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இப்புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் படி கடந்த ஐந்தாண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்பதை கருத்தில் கொண்டுஅணிகள் பட்டியலிடப்படும்.
பின்னர் ஒவ்வொரு அணியும் தான் பங்கு பெறும் தொடரை வென்றால் 2 புள்ளிகளும், தொடரை டிரா செய்தால் தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். தொடரைஇழக்கும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.
ஒவ்வொரு தொடர் முடிந்த பின்னும் ரேங்கிங் பட்டியல் புள்ளிகளின்அடிப்படையில் மாற்றியமைக்கப்படும்.
அதில் முதலிடம் பெறும் அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் டிராபி அளிக்கப்படும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை கடந்த ஐந்தாண்டில் அணிகள் பெற்றவெற்றிகளை கருத்தில் கொண்டு இத்திட்டம் புதுப்பிக்கப்படும்.
டெஸ்ட் போட்டி மீதான ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ரேங்கிங்கின் புதிய முறைகள் பற்றிய தகவல்கள்விஸ்டன் நிறுவனத்தினுடனான கலந்தாலோசனைக்கு பிறகு இறுதி செய்து அறிவிக்கப்படும் என்றும் கிரே தெரிவித்தார்.
ராய்டர்ஸ்