தமிழால் மீண்டனர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் யானையிறவை பிடிக்க நடந்த சண்டையில் இறந்து விட்டதாக கருதப்பட்ட இரண்டு இலங்கை ராணுவ வீரர்கள், தமிழ் பெரியவர் ஒருவரின் உதவியால்உயிரோடு திரும்பினர்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், கடந்த ஏப்ரலில் நடந்த சண்டையில் ஈடுபட்ட இலங்கையின் 9 வது சிங்களரெஜிமென்டைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சோரன்பட்டு ராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள்.
காட்டில் இலைகள் மற்றும் பழங்களை உண்டு உயிர் வாழ்ந்த இவர்களுக்கு தமிழ்ப் பெரியவர் ஒருவர் உதவி செய்து ராணுவ முகாம் ஒன்றிற்கு அழைத்துவந்துள்ளார். உடல் நலிவடைந்த ராணுவ வீரர்கள் இருவருக்கும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications