அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 6,000 பேர் தயார்!
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 6 ஆயிரம் பேர்விண்ணப்பித்துள்ளனர்.
வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க. சார்பில்போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க, விண்ணப்ப படிவ விற்பனை சென்றமாதம் 29-ம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஏராளமானவர்கள் தேர்தலில் சீட் கேட்டுவிண்ணப்பித்தனர். தேவக்கோட்டை ஒன்றிய செயலாளர் வக்கீல் செந்தில்நாதன்காரைக்குடி. திருப்பத்தூர், இளையான்குடி, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகளில் சீட்கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ ரமேஷ் ஜெயலலிதா தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் எனவிண்ணப்பித்தார்.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை வரை ஜெயலலிதா தங்கள் பகுதியில் போட்டியிடவேண்டும் என்று வந்த விண்ணப்பங்கள் உட்பட 6 ஆயிரம் பேர்விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்திற்கான விண்ணப் படிவத்தின் விலை ரூ 10,000. பாண்டிச்சேரிக்கானவிண்ணப் படிவம் ரூ 7,000 என்பது குறிப்பிடத்தகது.












Click it and Unblock the Notifications