பிரச்சனையில் பைக் விளம்பரம்
5 ஆண்டுகள் முடிவதற்கு முன்பாக ஏற்படக் கூடிய ஆட்சி மாற்றம், மாற்று அரசு வராததால் பாராளுமன்றக் கலைப்பில் முடிந்து விடக் கூடாது -என்ற யோசனை ஏற்கக் கூடியது அல்ல; மக்களே நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, பஞ்சாயத்துகளுக்கானஅடிமட்ட தேர்தல்கள் நேரடி வாக்குகள் மூலமாக நடக்க வேண்டும் ;
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வாக்களித்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - என்கிற யோசனை நல்லதல்ல ; இதுபாகிஸ்தானில் ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்த அயூப்கானின் யோசனை போல் இருக்கிறது ;
நமது அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் தொலை நோக்குடன் செயல் பட்டிருக்கிறார்கள் என்பதை மறக்கக் கூடாது.; ஸ்திரத்தன்மையை விட,பொறுப்புணர்வுக்கே அவர்கள் முக்கியத்துவம் அளித்தார்கள் ; இதில் எல்லாம் நம்பிக்கை இழப்பது நல்லதல்ல...
இது ஜனாதிபதியின் குடியரசு தின உரையின் ஒரு பகுதி. இதற்கு முன்னதாக மத்திய அரசினால் அமைக்கப்பட்டிருக்கும் அரசியல் சட்ட மறு ஆய்வு கமிட்டி, பலவிஷயங்கள் பற்றி மக்கள் கருத்தை அறிவதற்காக ஒரு சுற்றறிக்கையை பலருக்கு அனுப்பியிருக்கிறது.
அதில் மறைமுகத் தேர்தல் பற்றிய அபிப்ராயம் குறித்து மக்கள் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றத்தினால் பாராளுமன்றத்தின் ஆயுள்முடிந்து விடாமல் இருக்கும் வழிமுறை தேவையா என்பது பற்றியும், மக்கள் கருத்தை அறிய அந்த மறு ஆய்வு குழு முனைந்திருக்கிறது.
இது தவிர, பிரதமர் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியிருக்கறார். இதையெல்லாம் எதிர்ககும் வகையில் ஜனாதிபதி பேசியிருப்பது ஒருசர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.