2 யானைகள் மர்மமான முறையில் சாவு
கோவை:
கோவை மாவட்டம் மனாபதி காட்டுப் பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் இரண்டு யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள இந்திரா காந்தி மிருகக்காட்சி சாலையில் உள்ள இரண்டு பெண் யானைகள் கடந்த 2 நாட்களாககாணாமல் போனது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வால்பாறை வனத்துறை அதிகாரி தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், காணாமல் போன இரண்டு பெண் யானைகளும் இயற்கையாகத்தான்இறந்து போயிருக்க வேண்டும்.
20 வயதான பெண் யானை பன்னீர்மேடு எஸ்டேட் அருகே வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் உடலை கால்நடை மருத்துவர்ஒருவர் பிரேத பரிசோதனை செய்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கைகள் சாவிற்கான உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்கப்படுவதற்காக சென்னை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதே போல் சனிக்கிழமை மாலை 17 வயதான பெண் யானை ஒன்று தோணி முடி பகுதியில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த யானையின்சாவிற்கான காரணம் குறித்து அறிவதற்காக பிரேத பரிசோதனை அறிக்கைகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications