இலங்கை ராணுவத்துக்கு செக் குடியரசு உதவி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை ராணுவ வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக செக் குடியரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் வாங்க 20 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக பாகிஸ்தான் கூறிய 20 நாட்களில் தானும் உதவுவதாக செக்குடியரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் இலங்கைக்கு உதவுவதாக அறிவித்ததையடுத்து இலங்கைத் தலைநகர் கொழும்பு வந்த செக் குடியரசுராணுவ அமைச்சர் விலாடிமிர் விட்சி, அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்தித்து இலங்கை ராணுவ வீரர்களுக்குஅனைத்து உதவிகளையும் அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இலங்கை ராணுவ வீரர்களுக்கு, ஆயுத பலத்தை மேம்படுத்தவும், ராணுவ பயிற்சி மையங்கள் அமைக்கவும்அனைத்து உதவிகளையும் செக் குடியரசு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது.

செக் குடியரசு அடுத்த வருடம் நேச நாடுகளுடன் இணையவுள்ளதால், அனைத்து நாடுகளின் ராணுவ ஒத்துழைப்புசெக் குடியரசிற்குத் தேவைப்படுகிறது. இதனால் பிற நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ளும்முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது செக் குடியரசு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பில் உள்ள ஜான் கோடல்வாலா ராணுவ அகாடமிக்குச் செல்லுமுன் செக் ராணுவ அமைச்சர்விளாடிமிர், அதிபர் சந்திரிகா மற்றும் பிற அமைச்சர்கள் சிலரை சந்தித்துப் பேசினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+