கோவையில் 7 அல் - உம்மா தீவிரவாதிகள் கைது
கோவை:
தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் திங்கள்கிழமை இரவு கோவையில்போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததுதொடர்பாக அல் உம்மா தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகள் பெயர்:
ராஜா முகமது என்ற பாலவலாந்தரம், செல்வம் என்ற பரக்கத்துல்லா, பாபு என்ற இமாருதீன், குள்ளா பாபு என்றஇகாஸமுல்லா, சிக்கந்தர் பாஷா, ஷாஜகான் மற்றும் சுலைமான் என்ற இளங்கோ.
கடந்த பிப்ரவரி 12 ம் தேதி இவர்கள் மிகவும் பதட்டமான கொட்டமேடு பகுதியில் உள்ள வின்சன்ட் ரோட்டில்நடந்து சென்று கொண்டிருந்த முகமது யூனுஸ் என்பவரைத் தாக்கினர். இது தொடர்பாக இவர்களைத் தேடி வந்தபோது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
கோவையில் 1998 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் அல் -உம்மா தீவிரவாத இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications