தமிழகம், கேரளாவில் ஒரே நாளில் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழகத்திலும், கேரளத்திலும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்கும் எனத் தெரிகிறது.

இந் நிலையில் திருச்சியில் நிருபர்களிடம் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு அடையாளஅட்டை வழங்கப்பட்டுவிட்டது. மற்றவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் 43 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சோதனையிடப்பட்டுவருகிறது. முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பெயர்கள் நீக்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதையும்தேர்தல் கமிஷன் விசாரித்து வருகிறது.

வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். இதற்க வாக்காளர் அடையாள அட்டைகள் மிகஅவசியமாகும் என்றார்.

ஜெயலலிதா போட்டியிடத் தடை:

டான்சி நில பேர வழக்கில் குற்றவாளியாக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படுமா என்ற கேள்விக்கு கிருஷ்ணமூர்த்தி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+